×

கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

கந்தர்வகோட்டை,மே10: கந்தர்வகோட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியானார். புதுக்கோட்ட மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், கொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் விஷ்வா (22). இவர் தனது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றுள்ளார். அப்போது மோட்டார் அறையில் மோட்டாரை போடுவதற்காக வயல் பகுதியில் நடந்து சென்ற போது அருகில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ), சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி தவறி விழுந்த விஷ்வாவை மீட்டு, கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஷ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Gandharvakota ,Kandarvakottai ,Rajagopal ,Vishwa ,Kollampatti ,Kandarvakotta ,Pudukottai district ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு